பெண்களை இழிவாக பேசும் உதயநிதி உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்.. சசிகலா தம்பி மகன் ஜெய்ஆனந்த் நோட்டீஸ்.!

பெண்களை இழிவாக பேசும் உதயநிதி உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்.. சசிகலா தம்பி மகன் ஜெய்ஆனந்த் நோட்டீஸ்.!

Update: 2021-01-08 10:00 GMT

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை பற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கின்ற வகையில் பேசியதாக உதயநிதி ஸ்டாலினுக்கு, சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய்ஆனந்த் திவாகரன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது சசிகலாவை பற்றியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வந்தது. இதற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானிதி சீனிவாசன், மற்றும் குஷ்பு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாகவும், அவரது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜெய்ஆனந்த் திவாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி பேசிய பேச்சை திரும்ப பெறவில்லை என்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண் என்றும் பாராமல் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை கொண்டு உதயநிதி விமர்சித்தது மிகவும் கண்டனத்துக்குரியது எனவும் திவாகரன் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News