வெள்ளிமலை ஆசிரமம் குறி வைக்கப்படுகிறது எதனால்? - அர்ஜூன் சம்பத் வெளியிட்ட பகீர் அறிக்கை!
கன்னியாகுமாரி மாவட்டம் வெள்ளிமலை பால சுப்பிரமணிய திருக்கோவில் ஆலய முன்னேற்ற சங்க கட்டிடம் - (சஸ்டி மண்டபம்) பல ஆண்டு சிதிலமடைந்து காணப்பட்டதால் பக்தர்களின் நிதி உதவியோடு 11.3.2004 -ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு இந்து அநிலைய துறை ஆணையாளர் தனபால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த மண்டபத்தை திருவிழா மற்றும் ஆலய வளர்ச்சிக்காக பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்து அநிலைய துறை அதிகாரிகள் திடீரென பக்தர்கள் பயன் படுத்த முடியாத நிலையில் சீல் வைத்து பூட்டி சென்றுள்ளனர்.
இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டதில் வெள்ளிமலை முருகன் கோயில் மிக பிரசித்தம். சுற்றிலும் வயல்வெளியும் தென்னந்தோப்புமாக கொள்ளை அழகுடன் இருக்கும் அங்குள்ள முருகன் கோயில். இங்கு காலம் காலமாக ஒரு ஆசிரமம் உள்ளது.
வெள்ளிமலை ஆசிரமம் என்று சுற்றுவட்டார மக்களால் அன்போடும், மரியாதையாகவும் அழைக்கப்படும் விவேகானந்த ஆசிரமம் இங்குள்ளது . 1940-இல் தைப்பூசத் திருநாளில் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த ஆசிரமத்தின் தற்போதைய நிர்வாகி சுவாமி சைதன்யாநந்தா.சிறுவயது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடர்புடையவர். பட்டப் படிப்பு முடித்த பிறகு சுவாமி மதுரானந்தரின் அன்பால் ஈர்க்கப்பட்ட சுவாமி சைதன்யாநந்தர், தன்னை ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டார். 1998ம் ஆண்டு முதல், ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார்.
கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சிலும், முஸ்லிம்களுக்கு மதரஸாவிலும் மதம் போதிக்கப்படுகிறது. ஆனால் ஹிந்துகளுக்கு முறையாக மதத்தைப் போதிக்கக்கூடிய அமைப்பு இல்லை. ஹிந்துகளும் தங்கள் மதத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ளாததே இதற்கு காரணம் என்று இந்த ஆசிரமதில் ஐந்து நிலை கொண்ட பாடத்திட்டத்தினை உருவாக்கி பாடங்களும், தேர்வுகளும் நடத்தி பட்டம் வழங்கப்படுகிறது.