'மேயர் வேலையே செய்யலை', சொந்தக்கட்சி மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்கள் போர்க்கொடி - முட்டிக்கொள்ளும் மதுரை தி.மு.க
'வார்டுக்கு தேவையான அத்தியாவசியமான பணிகளை மாநகராட்சி செய்வதில்லை நேரம், தீர்மானங்கள் நிறைவேற்றுவதில்லை' என தி.மு.க மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் புகார் எழுப்பியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'வார்டுக்கு தேவையான அத்தியாவசியமான பணிகளை மாநகராட்சி செய்வதில்லை நேரம், தீர்மானங்கள் நிறைவேற்றுவதில்லை' என தி.மு.க மேயருக்கு எதிராக தி.மு.க கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் புகார் எழுப்பியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் தி.மு.க'வை சேர்ந்த இந்திராணி பொன் வசந்த் மேயராகவும், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த நாகராஜன் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிபாரிசால் இப்பதவிக்கு இவர்கள் அனுமதிக்கப்பட்ட நல்ல முதல் இன்று வரை பெரும்பாலான தி.மு.க கவுன்சிலர்கள் மாவட்ட நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதுமட்டுமின்றி இந்திராணி பொன் வசந்த் பொறுப்பேற்ற நாளிலிருந்து சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தில் கணவர் பொன் வசந்த் தலையீடு ஒரு பக்கம் என்றால் மேயருக்கு ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கி தியாகராஜனின் அலுவலகத்தில் பணியாற்றிய பெண்மணி நியமிக்கப்பட்டு அனைத்து விஷயத்திலும் அவர் தலையிடுவது சர்ச்சையாகி வருகிறது. இந்த அரசியலில் சிக்கி தவித்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கடந்த மாதம் இடமாறுதல் வாங்கிக்கொண்டு சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதிய ஆணையராக வந்தாலும் மந்தமான ஸ்மார்ட் சிட்டி வேலைகள், வரி வசூல் செய்வதில் பாரபட்சம் அத்தியாவசிய பணிகள், தூய்மை பணிகள் பிரச்சனை என மாநகராட்சி பணிகள் அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளது.
இந்த நிலையில்தான் நாலாவது மாமன்ற கூட்டம் நடந்தது, வழக்கம்போல அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர், இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ம.தி.மு.க எம்.எல்.ஏ பூமிநாதன், 'மாநகராட்சி முக்கிய பணிகள் ரொம்ப மெதுவாக நடக்கிறது, குடிநீர் குழாய் பதிக்கும் பணி, சாக்கடை பணிகள் எல்லாம் மெதுவாக நடக்கிறது என்பதை தெளிவுபடுத்துங்கள்' என்றார்.