ஸ்டாலினை வரவேற்க சக்தி வாய்ந்த வெடிகள்: பொதுமக்கள் அலரியடித்து ஓட்டம்! போலீசார் உட்பட பலர் படுகாயம்!

Update: 2021-03-19 01:30 GMT

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பிரசார செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தையும், மகனும் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கட்சியினர் அத்துமீறி வருவது தொடர்கதையாகி வரும் நிலையில், அது சமீபத்தில் விபரீத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார். அந்த நேரத்தில் திமுக கட்சியினர் தாம்பரம் பிரதான சாலையான சண்முகம் சாலையில் உள்ள வணிக வளாகத்தின் மீது அதிக சக்திவாய்ந்த வெடிகள் வெடித்தனர். 

அப்போது அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து, அந்த இடத்தில் பெரும் புகையுடன் தீப்பொறிகள் சிதறி கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது விழுந்தது.

இதில் அங்கு கண்கானிப்பு பணியில் ஈடுபட்டிருந்த உளவுத்துறை காவல் அதிகாரி ஒருவருக்கு காலில் பலத்த தீ காயம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார்.

அதேபோல் சாலையிலிருந்த பெண்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மீதும் தீ சிதறி விழுந்ததால் பலருக்கும் லேசான தீ காயங்கள் ஏற்பட்டதோடு, அச்சத்தில் அலறியடித்து ஓடியதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலர் காயமடைந்தனர்.

எதையும் திட்டமிடாமல் செய்வதாலும், கட்சி தலைமையில் தொடங்கி, கடைமட்ட தொண்டன் வரை வாடகை மூளை கண்ட்ரோலில் இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன. 

Similar News