இன்று உலக இதய தினம் - இதயத்தை காக்க இதமான யோசனைகள்
மனிதன் கருவில் உருவாகும் போது முதலில் உருவாவது இதய துடிப்புதான் அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த உயிர் துடிப்பான இதயத்தை பாதுகாக்க மருத்துவர்கள் கூறிய கட்டளைகள்
உலகில் புற்றுநோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களை விட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் தான் அதிகம். இதய நோய்களில் சராசரியாக ஆண்டுக்கு 1.70 கோடி பேர் உயிர் இழக்கின்றனர். இது அடுத்த 10 ஆண்டுகளில் 2.30 கோடியாக உயரும் என்கின்றன மருத்து ஆய்வு முடிவுகள். புகைபிடித்தல், மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு ,உடல் உழைப்பின்மை போன்றவற்றைத் தவிர்தாலே இதய கோளாறுகளால் ஏற்படும் என்பது சதவீத மரணங்களை தவிர்க்க முடியும் என்கிறது உலக இதய கூட்டமைப்பு. ரத்தக்கட்டிகள் இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பும், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதமும் ஏற்படலாம். அதேபோல் காலில் ரத்தக் கட்டிகள் ஏற்பட்டு அந்த கட்டிகள் உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் மூச்சு திணறல் ஏற்படும். இதய தசைகளின் பம்பிங் திறன் குறைவால் சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படவும் சாத்தியமுண்டு.
இதய நோய் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், நல்ல எண்ணம் ,நல்ல சுற்றுச்சூழல் ஆகியவை முக்கியமாகும். நம் உடல் உறுப்புகளில் முக்கியமானது இதயம். மூளைச்சாவடைந்தவர்களுக்கு கூட இதயம் வேலை செய்து கொண்டிருக்கும். எனவே இந்த இதயத்தை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் தலையாய கடமை .தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போதைய உணவு உள்ளிட்ட பல்வேறு பழக்க வழக்கத்தால் 15 வயது முதலே மாரடைப்பூபு ஏற்படுகிறது. எனவே உடற்பயிற்சி, நடைப்பபிற்சி,யோகாசனம் செய்தால் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
இடது கை தோள்பட்டையில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் உணவுகள், அசைவ உணவுகளை தவிர்த்தல் நல்லது. 19 வயது நபருக்கு கூட பைபாஸ் சர்ஜரி செய்யும் நிலை உள்ளது.
இதயம் இதமாக இருக்க 10 கட்டளைகள்.
1.உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
2. வெள்ளை சர்க்கரையை தவிருங்கள்.
3.கொழுப்பு சத்து மிகுந்த உணவைத் தவிருங்கள்
4. புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்