பாமாயில் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் டிசம்பர் வரை நீக்கம் - மத்திய அரசு!

Update: 2021-07-01 06:32 GMT

புதன்கிழமை அன்று அரசாங்கம், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை டிசம்பர் 31 வரை நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது உள்நாட்டுச் சந்தைகளில் பொருட்களின் இருப்புகளை அதிகரிக்கவும் மற்றும் விலையைக் குறைப்பதற்கும் உதவுகின்றது.


இந்த அறிவிப்பை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டது. மேலும் கேரளாவில் எந்தவொரு துறைமுகத்தின் மூலமும் இறக்குமதி செய்ய அனுமதியில்லை என்றும் அது தெரிவித்தது.

தடை செய்யப்பட்ட பிரிவின் கீழ், உள்வரும் ஏற்றுமதிக்கு இறக்குமதியாளர்கள் DGFT யிடம் இருந்து உரிமம் அல்லது அனுமதியைப் பெற வேண்டும். செவ்வாய்க்கிழமை அன்று அரசாங்கம் கச்சா பாமாயில் மீதான சுங்கவரியை 10 சதவீதமாகக் குறைத்தது.

உலகில் அதிகளவில் காய்கறி எண்ணெய்களை இறக்குமதி செய்வது இந்தியா ஆகும். ஆண்டுதோறும் 15 மில்லியன் டன் எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றது. இதில் 9 மில்லியன் டன் பாமாயில் ஆகும் மற்றும் மீதமுள்ள 6 மில்லியன் டன் சோயாபீன் மற்றும் பிற அடங்கும். இந்தோனேசிய மற்றும் மலேசியா ஆகிய இரண்டும் பாமாயிலை விநியோகம் செய்கின்றது.

கடந்த ஆண்டு உள்நாட்டுச் சமையல் எண்ணெய்யின் விலை இரண்டு மடங்காக அதிகரித்தது. இந்தியத் தனது சமையல் எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு மடங்கை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கின்றது.

அறிக்கையின் படி, மே 2021 இல் இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 48 சதவீதம் அதிகரித்தது மற்றும் மே 2020 இல் 4,00,506 டன் பாமாயிலை இறக்குமதி செய்தது. நாட்டின் மொத்த காய்கறி எண்ணெய் இறக்குமதி 2021 மே மாதத்தில் 68 சதவீதம் உயர்ந்தது.


நாட்டின் மொத்த காய்கறி எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு 60 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

source: https://www.financialexpress.com/economy/govt-removes-import-restrictions-on-refined-palm-oil-till-december/2281517/

Similar News