கோடீஸ்வரர் ஆவதற்கான வாய்ப்புகளை கொடுக்கும் அஞ்சலக சேமிப்புத் திட்டம் !

அஞ்சலகத்தில் இந்த சேமிப்பு திட்டம் மூலம் நீங்கள் கோடீஸ்வரர் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.

Update: 2021-11-18 12:51 GMT

தொடர்வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். அதிலும் அஞ்சலக திட்டம் என்பதால் பாதுகாப்பானதாகவும், கணிசமான லாபம் கொடுக்கக் கூடிய ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் முன்னணி வங்கிகள் கூட வட்டி விகிதத்தினை குறைவாக வைத்துள்ள நிலையில், அஞ்சலத்தில் வட்டி விகிதம் சற்று அதிகமாக உள்ளது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அஞ்சலகத்தின் இந்த தொடர்வைப்பு நிதி கணக்கினை பெரியவர்கள் தனியாக தொடங்கிக் கொள்ளலாம். 


ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். இதே 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த கணக்கினை பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். சலுகைகள் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன் கூட்டியே செலுத்தினால் தள்ளுபடி சலுகையினை பெறலாம். குறிப்பாக 6 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரையிலான தவணைகளை முன் கூட்டியே செலுத்தினால் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடி பெறலாம். 


இதே 12 மாதங்களுக்கான தொகையினை முன் கூட்டியே செலுத்தினால், ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். 12 மாத டொபாசிட்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். எனினும் இப்படி முன் கூட்டியே செலுத்தப்படும் தொகையானது குறிப்பிட்ட காலங்களில் செலுத்த முடியும். இத்தகைய திட்டங்களின் மூலம் நிறைய சேமிக்க முடியும் என்பது நிதர்சன உண்மை. 

Input & Image courtesy:Zee news

 



Tags:    

Similar News