தானிய மேலாண்மைக்கான தர கவுன்சில் அமைக்க அரசாங்கம் திட்டம்!

Update: 2021-04-02 12:47 GMT

உலகளவில் பொது விநியோகம் செய்யும் உணவு தானியங்களின் தரத்தை உறுதி செய்ய விநியோக முறையை நவீன மையமாக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது கொள்முதல் மற்றும் விநியோகம் செய்யும் வரை தகவல் தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு முறையை செயல்படுத்த உள்ளது.



மேலும் இந்த அமைப்பை மேம்படுத்தத் தர மேம்பாடு மற்றும் அங்கீகார சேவைகளுக்கான பொது நிறுவனமான குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா(QCI) உதவுகிறது என்று உணவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "சிறந்த உலகளாவிய நடைமுறையை அறிமுகப்படுத்த, QCI தற்போதுள்ள தரநிலையைச் சரிபார்த்து மதிப்பீடு செய்யும். நாட்டில் 67 சதவீத மக்கள் மானிய விலையில் வாங்கும் சத்தான உணவின் தரத்தை உறுதி செய்வது கட்டாயமாகும்."



அரசாங்கம், விவசாயிகள் முதல் நுகர்வோர் வரை செல்லும் உணவு தானியங்களின் ஒவ்வொரு பகுதியையும் கண்டறிந்து வரிசைப் படுத்தும் என்று அவர் தெரிவித்தார். "கொள்முதல் செய்யப்பட்டு, சேமிக்கப்பட்டு மற்றும் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களின் மூன்றாம் தரச் சான்றிதழை QCI மேற்கொள்ளும்," என்று அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில், உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து விநியோகிக்கும் நிறுவனமான இந்திய உணவு கழகம்(FCI) கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களின் விவரக்குறிப்பை மேம்படுத்தக் கேட்டுக்கொண்டது. இது கோதுமையின் நாட்களை அதிகரிக்க அதன் ஈரப்பதத்தை 14 முதல் 12 சதவீதம் வரை குறைக்கக் கேட்டுக்கொண்டது.


"இந்த பரிந்துரைகளுக்கு உணவு அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும், இந்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் தரமான உணவு தானியங்களை அரசாங்கத்தால் விநியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்," என்று அவர் தெரிவித்தார்.




பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கொள்முதல் செய்வதற்கு முன்பு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் நச்சுத்தன்மையை மாநில அரசாங்கம் சோதிக்க வேண்டுமென்றும் FCI பரிந்துரைத்தது. "குடவுனில் கணினிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் இந்த அமைப்பில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர முடியும். இது உணவு தானியங்கள் வீணாக்குவதையும் குறைக்கும்," என்று அவர் தெரிவித்தார்.

Similar News