தேசிய செயற்குழு கூட்டம்: பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கை!

தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கையை பாராட்டிய ஜே.பி நட்டா.

Update: 2022-07-04 02:01 GMT

ஐதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில், பொருளாதாரத் தீர்மானம் அரசின் 'கரீப் கல்யாண் சங்கல்ப்' இதனைத் தமிழில் ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் தீர்மானத்தை ஒப்புக்கொண்டதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். ஹைதராபாத்தில் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா உரையாற்றினார். பாரதீய ஜனதா கட்சி (BJP) சனிக்கிழமையன்று, உலகளாவிய இடையூறுகளை அடுத்து வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டியது மற்றும் ஆயுதப்படைகளுக்கான புதிய ஆள்சேர்ப்பு கொள்கையான அக்னிபத்தை பாராட்டியது.


அரசின் 'கரீப் கல்யாண் சங்கல்ப்' திட்டமானது வரவேற்கக் கூடிய ஒரு திட்டமாக அமைந்துள்ளது. மேலும் இத்தகைய, ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் தீர்மானத்தை ஒப்புக்கொண்டதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இந்த தீர்மானத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோரும் ஆதரித்தனர் என்று பிரதான் மேலும் கூறினார். அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் அதே வேளையில், நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்றும் வேலை வாய்ப்புகள் சரிவடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, மத்திய அரசு ஏற்கனவே அரசுத் துறை வேலைகளை உறுதியளித்துள்ளது என்றார்.


"வரும் ஆண்டுகளில் அரசுத் துறையில் 10 லட்சம் (1 மில்லியன்) வேலைகளை உருவாக்குவோம். அக்னிபாத் பாராட்டுக்குரியது. கதி சக்தியை அமல்படுத்துவது வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். உலகளாவிய சேவைத் துறை மற்றும் உலோகத் துறையிலும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது" என்றும் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறினார்.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News