Paytm பேமெண்ட் வங்கி லிமிடெட்: சுமார் ஒரு கோடி அபராதம் விதித்த RBI ! காரணம் என்ன?

Paytm பேமெண்ட் வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு ஒரு கோடி அபராத தொகையை RBI விதித்துள்ளது.

Update: 2021-10-21 13:06 GMT

இந்தியாவில் தற்போது முன்னணி நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான Paytm நிறுவனத்தின் துணை நிறுவனமான Paytm பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் தனது நிர்வாகம் மற்றும் சேவையில் விதிமீறல்கள் செய்துள்ளதை ரிசர்வ் வங்கி(RBI) கண்டுபிடித்துள்ளது. இதற்காக தற்போது RBI முறைகேடு மற்றும் விதிமீறல்கள் போன்ற குற்றத்திற்காக தனித்தனியாகப் Paytm பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் மீது சுமார் 1 கோடி ரூபாய் வரையிலான அபராதம் விதித்துள்ளது. இந்தியாவில் என்னவொரு வங்கியும் தான் செய்யும் நடவடிக்கைகள் பற்றிய தெளிவான உண்மைகளை RBI இடம் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி சொல்ல மறுக்கும் நிறுவனத்திற்கும் மற்றும் முறைகேடான தகவல்களைக் கொடுக்கும் நிறுவனத்திற்கும் தகுந்த வகையில் அபராத தொகையை RBI விதித்து வருகின்றது. 


அந்த வகையில் தற்போது. RBI தற்போது அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் சேவை தளங்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் விதிமீறல்கள், விதிகளை முறையாக நடைமுறைப்படுத்தாத அல்லது விதிகளை முழுமையாகப் பூர்த்திச் செய்யாதவர்களை கண்டுபிடித்து கடுமையான அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் மக்களுக்கு இதை வெளிப்படையான முறையில் அறிவிக்கிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் Paytm தன்னுடைய விதிமீறல் காரணமாக அபராத தொகையை வழங்க வேண்டும். 


இதன்படி Paytm நிறுவனம் தனது Paytm பேமெண்ட்ஸ் வங்கி செயலியை அறிமுகம் செய்யும் முன்பு ரிசர்வ் வங்கியிடம் இறுதி ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்து இருந்தது. ஆனால் Paytm பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் சமர்ப்பித்த தரவுகளுக்கும் உண்மையான சேவைகளுக்கும் மாறுபாடு இருந்ததை ரிசர்வ் வங்கி கண்டுப்பிடித்தது. இது PSS விதி பிரிவு 26(2) கீழ் விதிமீறல் என அறிவுறுத்தி Paytm பேமெண்ட்ஸ் வங்கியிடம் இதற்கான விளக்கத்தை வாய் மொழியிலும், எழுத்துப்பூர்வமாகவும் பெற்ற பின்னர் ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது 

Input & Image courtesy:NDTV news


 


Tags:    

Similar News