NPCIL தேர்வு மும்பையில் மட்டுமா? உதயநிதி ஸ்டாலினின் அடுக்கடுக்கான பொய்கள்!
NPCIL தேர்வு மும்பையில் மட்டுமா? உதயநிதி ஸ்டாலினின் அடுக்கடுக்கான பொய்கள்!
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (NPCIL) கல்பாக்கத்தில் அருகே அமைந்துள்ள, மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன் மையத்திற்கு ஸ்டைபண்ட் அடிப்படையில் வர்த்தக பயிற்சியாளர்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
65 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் பிட்டர், வெல்டர்,எலக்ட்ரீசியன், ஒயர்மேன், டிராப்ட்ஸ்மேன் ஆகிய வேலைகளும் அடக்கம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி ஜனவரி 11, 2021.
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் ஜனவரி 18 அன்று ஒரு ட்வீட்டை வெளியிட்டு இந்த வர்த்தக பயிற்சியாளர்கள் தேர்வு மும்பையில் மட்டுமே நடைபெறுவதாக குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மும்பைக்கு இரண்டு முறை சென்று வர வேண்டும் என்று அறிந்தவுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
ITI & பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட இப்பணிகளுக்கான பயிற்சிக்கு எழுத்து தேர்வோடு நேர்காணலும் நடத்தப்படுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. இத்தேர்வினை தமிழகத்தில் நடத்துவதோடு, இந்தப்பணிகள் தமிழக இளைஞர்களுக்கே கிடைக்க மத்திய-மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும். 2/2
— Udhay (@Udhaystalin) January 18, 2021
மேலும் ஐஐடி டிப்ளமோ தகுதி தேவைப்படும் ஒரு வேலைக்கு எழுத்துத் தேர்வும் நேர்காணலும் நடைபெறுவது சந்தேகத்தை எழுப்புவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த தேர்வுகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் இத்தகைய வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.