Kathir Impact : கதிர் செய்திகள் உண்மையை தோலுரித்து காட்டியதும் டீவீட்டை நீக்கிய தி.மு.க I.T விங்.!
Kathir Impact : கதிர் செய்திகள் உண்மையை தோலுரித்து காட்டியதும் டீவீட்டை நீக்கிய தி.மு.க I.T விங்.!
சென்னை விமான நிலைய முனையங்களுக்கு அண்ணா, காமராஜர் பெயர் நீக்கப்பட்டது என்று போலி தகவலை வெளியிட்டது தி.மு.க ஐ.டி விங்.
அந்த போலி தகவலை கதிர் செய்திகள் தோலுரித்து காட்டியதும் டீவீட்டை தி.மு.க ஐ.டி விங் நீக்கியுள்ளது. தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி இன்று வெளியிட்ட ஒரு ட்வீட்டில், சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டுமான முனையங்களுக்கு அறிஞர் அண்ணா மற்றும் காமராஜர் ஆகியோரின் பெயர்கள் உள்நோக்கத்துடன் விடுபட்டுள்ளதாக ஒரு டைம்ஸ் ஆப் இந்தியாவின் கட்டுரையை மேற்கோளிட்டனர்.
சென்னை விமான நிலைய முனையங்களுக்கு அண்ணா, காமராஜர் பெயர் தவிர்க்கப்பட்டதா? பொய்களைப் பரப்பும் தி.மு.க. ஐடி விங்.! https://t.co/f0Vp0JTRgs
— Kathir News (@KathirNews) February 10, 2021
இது எந்தளவு பொய் என்பதை கதிர் செய்திகள் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதையடுத்து சமூக ஊடக பயனாளர்கள் கதிர் செய்திகளை மேற்கோளிட்டு, இது குறித்து தி.மு.க IT விங்கிடம் கேள்வி எழுப்பினர். உண்மை வெளியானதை அடுத்து, எந்தவித மறுப்போ விளக்கமோ இல்லாமல் தி.மு.க IT விங் டீவீட்டை டெலிட் செய்துள்ளனர்.
அவர்கள் மேற்கோளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்திக் கட்டுரை கடந்த மார்ச் 2020 இல் வெளியானது. அந்த கட்டுரையின் தகவல்களின்படி, சென்னை விமான நிலையத்தில் புதிய முனையங்கள் கட்டப்பட்டும், விரிவாக்கம் செய்யப்பட்டும் வந்தன. ஏற்கனவே உள்நாட்டு முனையம் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரிலும், சர்வதேச முனையம் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பெயரிலும் பெயரிடப்பட்டிருந்தது. புது உள்நாட்டு முனையம் 2013ல் செயல்பட ஆரம்பித்தது.
விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து அறிஞர் அண்ணாவின் பெயர் சர்வதேச முனையத்திற்கு சூட்டப்பட்டது.