இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சகட்டம்: நட்பை வெளிப்படுத்திய மற்றொரு நாடு!

Update: 2021-05-07 12:04 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்தியாவிற்கு நட்பு நோக்கத்துடன் பல நாடுகள் உதவி செய்து வருகின்றனர். 

மேலும் பல்வேறு நிறுவனங்களும் தங்களால் முடிந்த நன்கொடைகளை இந்தியாவிற்கு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நெதர்லாந்து அரசு நட்பு நாடான இந்தியாவிற்கு தற்பொழுது மருத்துவ உபகரணங்களில் அனுப்பி தன்னுடைய நட்பை வெளிப்படுத்தி உள்ளது. 


எனவே நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு விமானம் மூலமாக சுமார் 449 வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளன. தற்பொழுது இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்குத் தேவைப்படுகின்ற ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்களின் தேவைகள் அதிகமாக இருந்து வருகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்களை தேவைப்படும் இடத்திற்கு இந்திய தனது விமானப் படையின் உதவியுடன் சரியான நேரத்தில் அனுப்பி வைக்கின்றது. 


அதிகரிக்கும் வைரஸ் இன் பாதிப்பு காரணமாக பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Similar News