கோவேக்சின் தடுப்பூசி இறக்குமதி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய பிரேசில்!
இந்தியாவில் மூன்று வகையான தடுப்பூசிகள் மக்களுக்கு பரவலாக போடப்பட்டு வருகின்றன. அதில் இந்தியாவை மையமாக வைத்து தயாரிக்கப்படும் கோவேக்சின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசியை பல நாடுகள் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவதற்காக பிரேசில் அரசு கடந்து பிப்ரவரி மாதம் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் பிரேசில் நாட்டின் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசிக்கான இறக்குமதி கோரிக்கைகளை மறுத்தது. தடுப்பூசியை ஆய்வு செய்து, பிறகே பிரேசிலில் தடுப்பூசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்ற சூழல் உருவானது.
கோவேக்சின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வற்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஒப்பந்தத்தின்படி, தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பப்படவில்லை. இதற்கிடையில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏற்கனவே அதிபர் போல்சனாரோ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக அவர் மீது பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்துள்ளனர்.
எனவே அடுத்தடுத்து பிரேசிலில் நடக்கும் தொடர் சம்பவங்கள் காரணமாக ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இதையடுத்து அவருக்கு எதிரான முறைகேடு புகார் குறித்த விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில், கோவேக்சின் 20 கோடி டோஸ்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ கெய்ரோகா அறிவித்துள்ளார்.