இத்தாலியில் இந்திய ராணுவ வீரர்களுக்கான நினைவகம் : அசத்திய ராணுவ தளபதி!

Update: 2021-07-09 10:38 GMT

இங்கிலாந்து, இத்தாலி நாடுகளுக்கு இந்திய ராணுவ தளபதி நரவானே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர்  இங்கிலாந்து நாட்டில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இத்தாலி நாட்டிற்கு சென்று அடைந்தார். அப்போது தலைநகர் ரோமில் நேற்று அவர் இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் லோரென்சோ குயரினியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.


இதனை தொடந்து இத்தாலி ராணுவ தளபதி பியட்ரோ செரினோவையும், இந்திய ராணுவ தளபதி நரவானே நேரில் சந்தித்தார். பின்னர் அவரிடம் இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கு இடையே உள்ள கூட்டு ராணுவ ஒத்துழைப்பின் அம்சங்கள் குறித்து விவாதித்தார்.


இதற்கு பின்னர் இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்காக, இத்தாலியின் கேசினோ நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ நினைவகத்தை இந்திய ராணுவத்தின் தளபதி நரவானே திறந்து வைத்தார். இதனை அடுத்து அவர் அங்கு அமைந்துள்ள கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News