நாடு முழுவதும் ஒமைக்ரான், கொரோனா வைரஸ் உயர்வு!

இந்தியா முழுவதும் தினமும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Update: 2022-01-02 06:10 GMT

இந்தியா முழுவதும் தினமும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து வருபவர்களின் எண்ணிக்கை 1,525 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 560 பேர் குணமடைந்துள்ளனர்.


இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 460, டெல்லியில் 351, குஜராத்தில் 136, தமிழகத்தில் 117, கேரளா 109 பேர் என்று பாதிப்படைந்துள்ளனர். அதே போன்று நேற்று (ஜனவரி 1) 27,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது அதற்கு முன்பு இருந்த நாளை விட அதிகமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News