பசு சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியில் பட்ஜெட் ஆணவங்கள்: காங்கிரஸ் முதலமைச்சரா இப்படி!

Update: 2022-03-09 14:35 GMT

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பசு சாணத்தால் உருவாக்கப்பட்ட பெட்டியில் வைத்து பட்ஜெட் ஆவணங்களை எடுத்து சென்று அம்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து அசத்தியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதலமைச்சராக இருப்பவர் பூபேஷ் பாகேல். இவர் இன்று (மார்ச் 9) சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் அனைவரையும் பேசும் பொருளாக ஒரு செயல் நடந்துள்ளது. அதாவது பட்ஜெட்டின் ஆவணங்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் சட்டசபைக்கு கொண்டு வந்தார். அந்த பெட்டி பசு சாணத்தால் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி எப்போதும் இந்து மதத்திற்கு எதிரான செயலில் ஈடுபடுவதை பார்ப்போம். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு முதலமைச்சர் முதன் முறையாக பசு சாணத்தால் செய்யப்பட்ட பெட்டியை கொண்டு வந்திருப்பது அவர்களின் கட்சியிலேயே பேசும் பொருளாக மாறியுள்ளது. எப்போதுமே பசு சாணம் மற்றும் கோமியத்தை காங்கிரஸ் கட்சியினர் கிண்டல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News