ஆம் ஆத்மி அரசின் மெத்தனப்போக்கு! தனி நாடு கேட்டு வாள், கத்தி எடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்!

Update: 2022-05-01 00:29 GMT

பஞ்சாபில் தனி நாடு கேட்டு வாள் மற்றும் கத்திகளை எடுத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீரென்று மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபை இந்தியாவிடம் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பது காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் நோக்கமாகும். இதற்காக அவர்கள் அவ்வப்போது எதாவது ரூபத்தில் தங்களது போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கம். அவர்களை இந்திய ராணுவம் அடக்கியே வைத்திருந்தது.

இதற்கிடையில் பஞ்சாபில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆம் ஆத்மி கையில் சென்றுள்ளது. இதனால் அவர்கள் சட்டம், ஒழுங்கை சரியாக காப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது காலிஸ்தான் குழுக்குளுக்கு எதிரான கோஷம் எழுப்பியபடி, சிவசேனா கட்சியினர் நேற்று பாட்டியாலாவில் பேரணி சென்றனர். அப்போது காலிஸ்தான் ஆதரவு குழுவினர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுப்பட்டனர். அது மட்டுமின்றி வாள், கத்தியால் சிவசேனா கட்சியினர் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகப்பெரிய பதற்றமான சூழல் நிலவியது. ஒருவர் மீது ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்டதால் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து தாமதமாகவே போலீசார் அங்கு சென்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாட்டியாலா ஜ.ஜி., எஸ்.பி., உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது இவர்கள் சரியான நேரத்தில் சட்டம், ஒழுங்கை காக்க தவறிவிட்டதாகவே கூறப்படுகிறது. ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வாள் எடுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இந்திய ராணுவம் களத்தில் இறங்கி இது போன்ற பயங்கரவாதிகளை ஆரம்பத்திலேயே அழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் ஆகும்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News