ஐதராபாத்துக்கு வருகை புரிந்த பிரதமரை வரவேற்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!

Update: 2022-05-26 13:01 GMT

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகருக்கு பிரதமர் மோடி இன்று வருகை புரிந்த நிலையில், அவரை விமான நிலையத்திலேயே ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொன்னாடை அணிவித்து, புத்தகம் அளித்து வரவேற்பு அளிததார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வந்திருந்தார். அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையம் சென்று வரவேற்றார். அவருக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எங்களின் தொலைநோக்கு சிந்தனை கொண்ட பிரதமர் மோடி வரவேற்பதில் மகிழ்ச்சி. ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் பங்கேற்று வெற்றிகரமாக முடித்த பின்னர் ஐதராபாத் நகருக்கு வருகை புரிந்துள்ளார். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News