ஆர்யன் கானை கைது செய்த ஷமீர் வான்கடே சென்னைக்கு வருகிறார்!

Update: 2022-05-31 08:20 GMT

போதைப்பொருள் பயன்படுத்திப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்த மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் மண்டல தலைவர் சமீர் வான்கடே தற்போது சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சொகுசு கப்பலில் மும்பை கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த சமயத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த கப்பலில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதாவது போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆர்யன் கான் குற்றவாளி இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில், போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க பேரம் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் சமீர் வான்கடே மீது விசாரணை நடத்துவதற்கு நிதி அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் மண்டல தலைவர் சமீர் வான்கடே சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது. அதன்படி சென்னை வரி செலுத்துவோர் சேவைகளின் பொது இயக்குநராக உடனடியாக பணியில் சேர மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News