அக்னி வீரர்களுக்கு வழங்கப்படவிருக்கும் விருதுகள் என்னென்ன? அதிரடியாக அறிவித்த பாதுகாப்புத்துறை

Update: 2022-06-22 08:44 GMT

ராணுவத்தில் பணியாற்ற உள்ள அக்னி வீரர்களுக்கு வீரதீர சாகசங்களுக்கான விருதுகள் கொடுக்கப்படும் என்று ராணுவ விவகாரங்களுக்கான துறை கூறியுள்ளது.

இந்திய ராணுவத்தில் புதிதாக அக்னிபாத் என்ற படையை மத்திய அரசு உருவாக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகுவதுடன் அவர்கள் 4 ஆண்டு பணியை முடித்து வந்த பின்னர் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளது.

இந்நிலையில், ராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராணுவப் பணி என்பது வேலைவாய்ப்புக்கான இடம் அல்ல, அது தேசபக்தியுடன் உணர்வுப் பூர்வமாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக அமையும். 50 பேரில் ஒருவர்தான் தேர்வு செய்யப்படுகிறார் என்றும் தகுதி அடிப்படையில் மிகச்சிறந்தவரே ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படுவதாகவும் தேர்வு முறை வெளிப்படையாக இருக்கும் எனவும் ராணுவ உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News