சீனாவிற்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசினாரா.. பா.ஜ.க சார்பில் கண்டனம்..

Update: 2023-08-22 05:03 GMT

லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்பொழுது லடாக்கில் மேச்சல் நிலத்தில் சீன ராணுவம் அபகரித்து இருப்பதாக திடீர் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். குறிப்பாக அவர் நடப்பது என்னவென்று தெரியாமல் மத்திய அரசு மீதும் பா.ஜ.கவின் மீதும் வேண்டுமென்று பழி போடும் விதத்தில் மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார். குறிப்பாக இது பற்றி அவர் கூறும் பொழுது, லடாக்கில் ஒரு அங்குல நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதை தவறு என்றும் பேட்டி அளித்து இருக்கிறார்.


ராகுல் காந்தியின் இந்த ஒரு குற்றச்சாட்டை நிராகரித்து பாஜக சார்பில் அவருடைய கருத்திற்கு தற்போது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த ஒரு சர்ச்சை தான் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறும் பொழுது, "ராகுல் காந்தி லடாக் பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் தவறானது உங்கள் முழு அறிக்கையையும் கட்சியின் சார்பில் நான் கண்டிக்கிறேன். கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள் கால்வானில் நமது வீரர்களின் அடிபணியா வீரத்தால் சீனா பின்வாங்கியது இது உண்மையா இல்லையா?


லடாக்கில் சென்று இந்தியாவை ஏன் அவதூறு செய்கிறீர்கள்? நீங்கள் ஏன் சீனாவின் பிரச்சார எந்திரமாக மாறுகிறீர்கள்? நீங்கள் எல்லைப் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் ஏதாவது ஒன்றை சொல்லி, இந்தியாவிற்கு எதிராக சீனாவிடம் பிரசாரம் செய்கிறீர்கள்? இதுதான் உங்களுடைய இயல்பா? இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை நீங்கள் எவ்வளவு புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது குறித்து நாங்கள் உங்களுடன் விவாதிப்போம். ஆனால் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவின் மன உறுதியை நீங்கள் இப்படி கருத்து தெரிவித்து இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News