கொரோனாவால் உயிரிழந்த 123 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

கொரோனா வைரஸ் தொற்றின்போது பணி செய்த பத்திரிகையாளர்கள் பலர் உயிரிழக்க நேரிட்டது. அது போன்றவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

Update: 2022-02-11 02:26 GMT

கொரோனா வைரஸ் தொற்றின்போது பணி செய்த பத்திரிகையாளர்கள் பலர் உயிரிழக்க நேரிட்டது. அது போன்றவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் பற்றிய கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: கொரோனா வைரஸால் உயிரிழந்த 123 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு மனு அளித்திருந்தனர். அதனை பரிசீலனை செய்து ஏற்கப்பட்டு 123 குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 6.15 கோடி உதவி தொகை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News