கர்நாடகாவிற்கு இனிமேல் நல்ல காலம்: மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் பேச்சு!

Update: 2022-04-11 04:53 GMT

கர்நாடகாவிற்கு இனிமேல் நல்ல காலமே நடக்கும் என்று 161 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் திறப்பு விழாவில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் பிதனகரே பகுதியில் 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டது. அந்த சிலையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: பஞ்சமுகி ஆஞ்சநேயர் என்பது ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள அனுமனின் சிறப்பு வடிவம் ஆகும். கர்நாடக மண்ணில் 161 அடி உயரத்தில் சிலை வைக்கப்பட வேண்டும் என்பது அனுமனின் விருப்பமும் ஆகும்.

இந்த சிலையை மிகவும் அற்புதமான முறையில் சிற்பிகள் செய்துள்ளனர். இப்பகுதியில் ராம நவமிக்காக பல்வேறு புனிதமான பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் காலங்களில் கர்நாடகா மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். மாநிலத்திற்கு நல்ல காலம் வரஉள்ளது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News