விடாமல் துரத்தும் 2வது அலை : ஓய்வெடுக்காத மத்திய சுகாதாரத்துறை!

Update: 2021-06-30 12:32 GMT

தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் கடந்த 2020ஆம் ஆண்டு பரவிய தொடங்கியது. முதல் அலை கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும், இந்த வருடம் இரண்டாம் அலை அதிகரித்தது. முதல் அலையை விட இரண்டாம் அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவ்வப்போது கொரோனாவின் பாதிப்புகள் குறைவதும், அதிகரிப்பதும் என மாறி, மாறி நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை உருவாகி அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. 


இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் கூறுகையில், "இன்னும் கொரோனா இரண்டாம் அலை முடியவில்லை எனவே நாங்கள் ஓய்வெடுக்க முடியாது" என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகம் தணிந்து உள்ளதால், தற்பொழுது 2வது அலை முடிவடைந்து விட்டது என்று பலரும் நம்பி கொண்டு வருகின்றனர். இது குறித்து கூறியுள்ள மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்கள் இன்னும் கொரோனா இரண்டாம் அலை குறையவில்லை என்ற அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.


குறிப்பாக டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து விட்டது உண்மைதான். ஆனால், ஒன்றரை வருடகாலமாக இருந்த கொரோனா பாதிப்பின் அனுபவங்கள் எங்களை எந்த சூழ்நிலையிலும் ஓய்வு எடுக்க கூடாது என கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து மக்களும் கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலமும் முறையாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமும் நாம் கொரோனாவிலிருந்து வெற்றி பெற முடியும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 

Similar News