காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 2 பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம்!

Update: 2021-07-10 01:30 GMT

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து காஷ்மீர் பகுதியில் புகுந்து, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் இடங்களை கண்டுபிடித்து, ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஜூலை 8 ஆம் தேதி காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி பகுதியில் உள்ள தாடல் காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரியவந்தது.


இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினரின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, கையெறி குண்டுகளையும் வீசினர். இதற்கு இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் கொடுத்தனர். இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். மேலும் இந்த தாக்குதலில் இரண்டு  பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அதுமட்டுமின்றி இரண்டு வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கு கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு AK 47 ரக துப்பாக்கிகளும், பெரிய அளவிலான வெடி மருந்துகளையும் பாதுகாப்பு படையினர்  கைப்பற்றினர். இதனை அடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News