'காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை' : I.G.P விஜய்குமார் தகவல்!

Update: 2021-07-08 10:11 GMT

ஜம்மு காஷ்மீரில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள பூசல் பகுதியில் நள்ளிரவு முதல் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. பூசல் பகுதியில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாதிகளை  என்கவுண்டர் செய்யும் பணியை செய்து வருகின்றனர்.  


இது குறித்து  காஷ்மீர் I.G.P விஜய் குமார் கூறும்போது " நேற்று இரவு குல்கம் மற்றும் புல்வாமா என இரண்டு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டரில் ஈடுபட்டனர். குல்கம் பகுதியில் லக்ஷ்ர் இ தொய்பா வை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் வந்தது. இதனை அடுத்து ராணுவ படையினர் மற்றும் குல்கம் காவல்துறையினர் இணைந்து அந்த இரண்டு பயங்கரவாதிகளை சுட்டு  கொன்றனர்.


புல்வாமா பகுதியில் உள்ள கிராமத்தில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்தனர். அங்கு இருந்த காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையுமாறு தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் அங்கிருந்த அதிகாரிகளை நோக்கி சுட தொடங்கினர். அப்போது நமது பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அங்கு இருந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இறந்துபோன அந்த இரண்டு பயங்கரவாதிகளும்  லக்ஷ்ர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது வரை காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருக்கு பாதிப்பு எதுவுமின்றி செயல்பட்டு என்கவுண்ட்டரில் ஈடுபட்ட காவல் துறையினருக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News