கீவ்வில் இருந்து 6 மணி நேரத்தில் 1,855 மாணவர்கள் மீட்பு: பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டு!

Update: 2022-03-05 06:44 GMT

பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து 6 மணி நேரத்தில் போரை ரஷ்ய அதிபர் புடின் நிறுத்தினார். இதனால் அங்கு சிக்கித்தவித்த 1,855 இந்திய மாணவர்களுக்கு எவ்வித சேதாரமின்றி மீட்கப்பட்டனர். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால், இந்திய மாணவர்கள் பலரை மத்திய அரசு இரவு, பகலாக மீட்டு வந்தது. இதற்கிடையில் ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகரான் கீவ்வை சுற்றி வளைத்து பயங்கரமான தாக்குதலை நடத்தியது. இதனால் அங்கிருந்து இந்திய மாணவர்கள் வெளியேற முடியாத சூழல் நிலவியது.

இதனால் வெளியுறவுத்துறையால் இந்திய மாணவர்களை மீட்பதற்கு மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது. இதனிடையே பிரதமர் மோடி கடந்த 2ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி வாயிலாக ஒரு வேண்டுகோளை விடுத்தார். அதே சமயம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியிடமும் மாணவர்கள் குறித்த கவலையை கூறினார்.

இதனை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவில், நேற்று முன்தினம் சுமார் 6 மணி நேரத்திற்கு ரஷ்ய படைகள் வெடிகுண்டு போடுவதை நிறுத்தியது. இந்த சமயத்தை பயன்படுத்தி அங்கிருந்து 1,855 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதற்கு பிரதமர் மோடியின் ராஜதந்திரம் என்று அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News