நாடு முழுவதும் 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.!

நாடு முழுவதும் 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.!

Update: 2020-12-04 18:03 GMT

கொரோனா வைரஸ் தொற்று அனைத்து நாடுகளிலும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது என்றே சொல்லலாம். தடுப்பு மருந்துகள் 95 சதவீதங்கள் வெற்றி பெற்றுவிட்டது. இதனால் நம்மை விட்டு கொரோனா விரைவில் விலகிவிடும்.


இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், முதலில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், இதனையடுத்து முன்கள பணியாளர்கள் 2 கோடி பேருக்கும் போடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவலை தெரிவித்துள்ளது.
 

Similar News