விவசாயிகளுக்கு நேரடியாக 2 லட்சம் கோடி வங்கி கணக்கில் - பிரதமர் மோடி பெருமிதம்

விவசாயிகள் வங்கி கணக்கில் இதுவரை இரண்டு லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-09 13:59 GMT

விவசாயிகள் வங்கி கணக்கில் இதுவரை இரண்டு லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வங்கி கணக்கில் மத்திய அரசால் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் அருகே அரசின் நலத்திட்ட பயனாளிகள் இடையே காணொளி மூலம் பிரதமர் உரையாற்றினார், அப்போது பேசிய அவர் குஜராத்தின் கிராமப்புற பகுதியில் உள்ள வீடுகளில் 97 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்திருப்பதாக தெரிவித்தார்.



Source - Polimer NEWS

Similar News