"2047'இல் இந்தியாவை நம்பர் 1 நாடாக மாற்ற பிரதமர் மோடி திட்டம்!" - அமித்ஷா கூறியது என்ன?

Update: 2022-04-24 09:17 GMT

பீகார்: "மோடி அரசு கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாண்டது" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் பேசியுள்ளார்.


பீகாரில் சுதந்திர போராட்ட வீரர் குன்வர் சிங்கின் நினைவு நாளையொட்டி, நேற்று  நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமித்ஷாவின்  வருகையையொட்டி பீகார் பா.ஜ.க'வினர் மிக பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.


இந்த பிரம்மாண்ட வரவேற்பை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித்ஷா, பின் உரையாற்றினார் " பிரதமர் மோடியின் அரசு கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாண்டு மக்களை காப்பாற்றியது. மக்களுக்கு பயன் தரும் வகையில் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது மத்திய அரசு. இந்தியாவை 2047-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்."

என்று ஊக்கம் தரக்கூடிய வகையில் அமைச்சர் உரையாற்றினார்.


புதுச்சேரியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்றைய தினம் அமித் ஷா சென்னை வந்தடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maalaimalar

Tags:    

Similar News