3 கொரோனா தடுப்பூசிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.. பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை.!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

Update: 2021-06-07 11:55 GMT

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசும்போது, நாட்டில் உள்ள அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு விட்டது. மற்ற குடிமக்களுக்கு போடும் பணியானது விரைவில் முடிவடையும். அதற்கான பணிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மேலும், தடுப்பூசி தயாரிக்கும் பணியில் 3 நிறுவனங்கள் பரிசோதனைகள் முடியும் தருவாயில் உள்ளது. அந்த தடுப்பூசிகளும் நாட்டு மக்களுக்கு விரைவில் கிடைத்துவிடும். கொரோனா இல்லாத இந்தியா விரைவில் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News