காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! துப்பாக்கி, வெடிகுண்டுகள், வெளிநாட்டு பணம் பறிமுதல்!

காஷ்மீர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ராம்பூர் அருகே காடுகள் நிறைந்த பகுதியில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளது. இதனை இந்திய ராணுவம் பார்வையிட்டுள்ளது.

Update: 2021-09-23 12:54 GMT

காஷ்மீர், ஊரி பகுதி அருகே 3 பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.


காஷ்மீர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ராம்பூர் அருகே காடுகள் நிறைந்த பகுதியில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளது. இதனை இந்திய ராணுவம் பார்வையிட்டுள்ளது. இதனிடையே அவர்களை இந்திய ராணுவம் சுற்றி வளைத்து தாக்கியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தனர். மற்ற மூன்று பேர் காடுகளில் தப்பியோடியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.


உயிரிழந்தவர்களிடம் இருந்து 5 ஏகே ரக துப்பாக்கிகள், 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 70 கையெறி குண்டுகளையும் இந்திய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், ஒரு பயங்கரவாதியிடம் பாகிஸ்தான் நாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளும் இருந்ததாக ராணுவம் கூறியுள்ளது.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News