403 தொகுதியிலும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை: முதலமைச்சர் யோகியின் அதிரடி பிளான்!

Update: 2022-04-11 01:58 GMT

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநில அளவிலான சுகாதார திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதியிலும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், பாஜக அரசு மாநிலத்தில் உள்ள சுகாதார கட்டமைப்பை மிகவும் வலிமையுடையதாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது. அதே போன்று ஜன் ஆரோக்கிய மேளா இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தொடங்கி நடைபெறும்.

அங்கு ஒவ்வொரு பொதுமக்களும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவசமாக மருந்துகளை பெற்று செல்லலாம். இத்திட்டம் கடந்த 2020ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. இவ்வாறு முதலமைச்சர் யோகி கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News