இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் "மேக் இன் இந்தியா" திட்டத்தில் உருவானது - அசர வைக்கும் டெக்னாலஜி!

Update: 2022-10-15 02:35 GMT

இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப் பட்டுள்ள 5ஜி உள் கட்டமைப்பு மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவானது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொழில் நுட்பம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை விரும்பும் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயராக இருக்கிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி தொழில் நுட்பத்திற்கான உள் கட்டமைப்பு முற்றிலும் தனித்துவமானது. எங்களின் 5ஜி தொழில் நுட்பம் வேறு எங்கு இருந்தும் இறக்குமதி செய்யப் படவில்லை. அது முழுவதும் எங்களின் சொந்த தயாரிப்பு.

தென்கொரியா, உலகின் பிற பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் இருந்தாலும், அவை இறக்குமதி செய்யப்படவில்லை. நாங்கள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பத்தை அதனை விரும்பும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியால் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகள் குறித்து நிச்சயம் நாம் பெருமைப்பட முடியும் என அமைச்சர் பேசினார். 

Input From: Hindu Tamil


Similar News