மாவட்ட கவுன்சில் தேர்தல் நேரத்தில் 6 மூத்த கட்சி தலைவர்கள் இராஜினாமா - மெஹபூபா முப்திக்கு பெரும் பின்னடைவு.!

மாவட்ட கவுன்சில் தேர்தல் நேரத்தில் 6 மூத்த கட்சி தலைவர்கள் இராஜினாமா - மெஹபூபா முப்திக்கு பெரும் பின்னடைவு.!

Update: 2020-11-27 09:39 GMT

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டம் 370-ஐ மத்திய அரசு சென்ற ஆண்டு நீக்கிவிட்டது, ஒரே நாடு ஒரே தேசீய அரசு என்ற கொள்கையின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு ஒரே தேசீய கொடிதான் என்பதை உணர்த்தும் வகையில் அங்கு அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்டிருந்த ஜம்முகாஷ்மீருக்கான கொடியை இறக்கிவிட்டு  தேசீயக் கொடி மட்டுமே தற்போது பறக்கவிடப்படுகிறது. 

இந்த நிலையில் அங்குள்ள பிரிவினைவாத கட்சிகளும் தீவிர வாத அமைப்புகளும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இநிலையில், காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியின்  தலைவர் மெகபூபா முப்தி சில தினங்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் " மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் கொடியைக் காட்டி  என் கொடி இதுதான் இந்தக் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால்தான் மூவர்ணக் கொடியை ஏற்றுவோம் என்று கூறினார்..எங்கள் சொந்தக் கொடியைத் திரும்பப் பெறும் வரை, நாங்கள் வேறு எந்தக் கொடியையும் உயர்த்த மாட்டோம்.

நான் போராட்டக்குணம் உடையவள். எனக்குத் தேர்தல்களில் ஆர்வம் இல்லை. எங்கள் சிறப்பு அந்தஸ்து மீண்டும் எங்களுக்கு கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியல் சட்டம் 370-ஐ மீட்பதல்ல என் போராட்டம், காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்தே எனது போராட்டம் என்றார்.

இந்நிலையில், நாட்டின் தேசியக் கொடி குறித்து மெகபூபா முப்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங்  காஷ்மீர் பிரிவினைவாதிகளை விட  காஷ்மீர் அரசியல்வாதிகள் மோசமானவர்கள் என கூறி உள்ளார்.

மெகபூபா போன்ற தலைவர்கள் பிரிவினைவாதிகளை விட ஆபத்தானவர்கள் என்றும், பதவி இருக்கும்வரை நாட்டின் பெருமை பேசிவிட்டு பதவி போனதும் பாகிஸ்தானின் குரலில் பேசுகிறார் என கூறினார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்திக்கு மிகப்பெரும் பின்னடைவாக, தமன் பாசின், பல்லாயில் சிங், மற்றும் பிரிதம் கோட்வால் ஆகிய மூன்று மூத்த கட்சிதலைவர்கள் கட்சியில் இருந்து விலகினர்.ஏற்கனவே மூன்று நிறுவனத் தலைவர்கள் விலகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

“ஒரு மர்மமான முறையில் செயல்படும் நேர்மையற்ற, வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாத கூறுகளால் மாறியுள்ள கட்சியின் கொள்கை எங்களுக்கு உகந்தது அல்ல எனக் கூறி ராஜினாமா செய்துள்ளனர்.

பி.டி.பி.யின் மூன்று கட்சி நிர்வாகிகளின் ராஜினாமா, முன்னாள் மாநிலங்களவை எம்.பி. டி.எஸ்.பஜ்வா உள்ளிட்ட மூன்று கட்சி தலைவர்கள் ராஜினாமாவுக்கு அடுத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தற்போது ராஜினாமா செய்துள்ள பிரிதம் கோட்வால் கூறுகையில் " சமீபத்திய காலங்களில் மெஹபூபா முப்தி எடுத்த நிலைப்பாட்டுடன் நாங்கள் ஒத்துப்போகவில்லை என்றார். “என்றார். எங்களுக்கு ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று மற்றொரு பிடிபி தலைவர் தமன் பாசின் கூறினார்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நவம்பர் 28 முதல் எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் ராஜினாமாக்கள் வந்துள்ளது மெஹபூபா முப்திக்கு மிகப்பெரும் பின்னடைவாக மாறியுள்ளது

Similar News