70 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்ய வேண்டியதை 9 ஆண்டுகளில் நடத்திக் காட்டிய பாஜக அரசு - சத்தமில்லாமல் நடக்கும் சாதனைகள்!

Update: 2023-04-12 01:18 GMT

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஆட்சியையும், வணிகத்தையும் எளிதானதாக மாற்றும் நோக்கில் கடந்த 9 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலாவதியான விதிகள் மற்றும் சட்டங்களை நீக்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

காலனியாதிக்க மனோ நிலையை தொடர்வதை விரும்பிய இதர ஆட்சியாளர்களைப் போலன்றி காலாவதியான விதிகள் மற்றும் சட்டங்களை நீக்குவதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்ததாகத் தெரிவித்தார்.

2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள், அரசு அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெறும் நடைமுறை நீக்கப்பட்டதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

ஓய்வூதியம் பெறுவதில் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதனால், மூத்த குடிமக்கள் வாழ்க்கைச் சான்றிதழ் பெறுவதில் இருந்த சிரமம் குறைந்ததாகவும் அவர் கூறினார். பெரும்பாலான சேவைகள் இணைய வழியில் மாற்றப்பட்டதால் வெளிப்படைத்தன்மை அதிகமானதாகவும் அமைச்சர் கூறினார்.

சுகாதாரத் துறையில் ஏற்பட்ட தொழில்நுட்பத்தினால் கொரோனா காலத்தில் தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுகாதார சேவைகளை வழங்க முடிந்ததாக கூறினார். இந்த அரசு தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையிலும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஸ்டார்ட்அப்களை அனுமதித்தால், மக்களின் வாழ்க்கையே மாறியுள்ளதாகவும் கூறினார்.

கடந்த 70 ஆண்டுகளாக இருந்த ஆட்சிகளின் முக்கியத்துவம் வேறாக இருந்ததாகவும், ஆனால் இத்தனை ஆண்டுகளில் செய்ய வேண்டியதெல்லாம் கடந்த 9 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது என்றார். 

Input From: deccanherald


Similar News