இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றுக்கு இதுவரை 96 பேர் பாதிப்பு.!

இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றுக்கு இதுவரை 96 பேர் பாதிப்பு.!

Update: 2021-01-11 15:11 GMT

இங்கிலாந்தில் இருந்து வந்த உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களையும் கண்டறிந்து சோதனை நடத்தியதில் சிலர் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை தனித்தனி அறையில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த வைரஸை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News