தடுப்பூசி கேட்டு முதலமைச்சர்கள் மிரட்டுகிறார்கள்.. இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு ஆதார் பூனவல்லா மத்திய அரசுக்கு கோரிக்கை.!

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி கோவிஷீல்டை விரைந்து தருமாறு மாநில முதலமைச்சர்கள், தொழிலதிபர்கள் மிரட்டல் விடுத்து வருவதாக ஆதார் பூனவல்லா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-06 05:22 GMT

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி கோவிஷீல்டை விரைந்து தருமாறு மாநில முதலமைச்சர்கள், தொழிலதிபர்கள் மிரட்டல் விடுத்து வருவதாக ஆதார் பூனவல்லா பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




 


சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கும், குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.




 


ஏற்கனவே மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Similar News