தீபாவளி வரை ரேஷனில் இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும்.. பிரதமர் மோடி.!

நாடு முழுவதும் தீபாவளி வரைக்கும் ரேஷனில் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது உரையின் மூலம் நாட்டு மக்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-07 12:18 GMT

நாடு முழுவதும் தீபாவளி வரைக்கும் ரேஷனில் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தனது உரையின் மூலம் நாட்டு மக்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையில் இருந்து தற்போது இரண்டாவது அலை வரை பிரதமர் மோடி துரிதமாக செயல்பட்டு நாட்டு மக்களின் உயிர்களை காப்பாற்றி வருகிறார். இதனிடையே 2வது அலை நாடு முழுவதும் வேகமாக குறைந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையே காரணம் என்றும் கூறப்படுகிறது.




 


கொரோனா தொற்று ஊரடங்கால் நாடு முழுவதும் உணவின்றி இருக்கக்கூடாது என்பதற்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் மத்திய அரசு இலவசமாக உணவு பொருட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் 80 கோடி மக்கள் இலவச உணவு தானியங்களை பெற்று வருகின்றனர்.

அந்த உத்தரவுகள் வருகின்ற தீபாவளி வரை ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News