65வது அம்பேத்கர் நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை!

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 65வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று அரசியல் கட்சியின் தலைவர்களும் அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Update: 2021-12-06 04:58 GMT

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 65வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று அரசியல் கட்சியின் தலைவர்களும் அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவரை தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, மற்றும் காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர்களும் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News