ஆந்திராவில் பரபரப்பு: 24 அமைச்சர்கள் ராஜினாமா!

Update: 2022-04-08 00:45 GMT

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இவரது தலைமையில் ஆட்சி அமைந்து வருகின்ற மே மாதத்துடன் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி அமைச்சரவை மாற்றியமைக்க, ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 5 துணை முதலமைச்சர்கள் நியமனம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது உள்ள 24 அமைச்சர்களும் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ராஜினாமா கடிதங்களை அமைச்சர்கள் வழங்கியுள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News