போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை சுடுங்கள்: அசாம் முதலமைச்சர் பேச்சு.!

குற்றவாளிகள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றால் அவர்கள் மீது முழங்காலில் துப்பாக்கிச் சூடு நடத்துங்கள் என்று போலீசாரிடம் அசாம் மாநில முதலமைச்சர் கூறியுள்ளார்.

Update: 2021-07-06 12:45 GMT

குற்றவாளிகள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றால் அவர்கள் மீது முழங்காலில் துப்பாக்கிச் சூடு நடத்துங்கள் என்று போலீசாரிடம் அசாம் மாநில முதலமைச்சர் கூறியுள்ளார். குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசுகையில், 'குற்றவாளிகள் போலீசார் பிடியின் போது தாக்கிவிட்டு, தப்பிக்க முயன்றால் அல்லது போலீசாரின் ஆயுதங்களை பறிக்க முயன்றாலோ அவர்கள் மீது முழங்காலில் சுட வேண்டும் என்று கூறியுள்ளார். 


இது போன்ற குற்றவாளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு சட்டம் அனுமதிக்கிறது. சட்டம் எதனை செய்வதற்கு அனுமதி அளிக்கிறதோ அதனை மக்களின் நலன்கருதி மனசாட்சிபடி செயல்பட வேண்டும். மேலும், பாலியல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனையை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News