கள்ளச்சாராய விவகாரம்.. 9 பேருக்கு தூக்கு தண்டனை.. 4 பேருக்கு ஆயுள்.!
கடந்த 2016ம் ஆண்டு பீகாரில் கள்ளச் சாராயத்தை குடித்து 19 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் 4 பெண்கள் உள்பட 14 பேரை பீகார் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கானது கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த 2016ம் ஆண்டு பீகாரில் கள்ளச் சாராயத்தை குடித்து 19 பேர் உயிரிழந்தனர்.இந்த வழக்கில் 4 பெண்கள் உள்பட 14 பேரை பீகார் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கானது கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கில் சிறையில் இருந்த ஒருவர் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பீகார் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக குற்றவாளிகளின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.