பிஹாரில் வீடு வாடகை எடுத்து, மத மாற்ற செயலில் ஈடுபட்ட இரண்டு கேரள பாதிரியார்கள் !

Update: 2021-11-08 05:28 GMT

பீகாரில் பொதுமக்களுக்கு இலவசமாக பைபிள் வழங்கி சட்டவிரோதமாக மதமாற்ற செயலில் ஈடுபட்ட இரண்டு கேரள பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரில் சோப்பால்  என்ற மாவட்டத்திலுள்ள சூலூர் என்ற கிராமத்தில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு பாதிரியார்கள் சட்டவிரோதமாக மதமாற்ற செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருவர்  ஜார்ஜ் என்ற ஆண் பாதிரியார் மற்றொருவர் ரிஷு  என்ற பெண் பாதிரியார். இருவரும் அப்பகுதியில்  வாடகை வீடு ஒன்று எடுத்து இந்த சட்டவிரோத மத மாற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். 

பாதிரியார் ஜார்ஜிடம்  நடத்திய விசாரணையில் அவர் ரூபாய் பன்னிரெண்டாயிரத்துக்கு   இந்த மதமாற்ற செயலை செய்ததாக தெரியவந்தது. . இந்தப் பாதிரியாரையும் தொடர்ந்து  கிராமத்து மக்களையும் அவர்கள் பண ஆசையை தூண்டி   மதமாற்ற செயலுக்கு ஈடுபடுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

பீம்போர் காவல் துறை இரண்டு கேரள பாதரியார்களிடம்  விசாரணையைத் தொடங்கியுள்ளது.

OP India

Tags:    

Similar News