கேரளாவில் பாஜக தொண்டர் ஒருவர் வெட்டிக்கொலை - சமூக விரோதிகளின் தயவில் ஆட்சி நடத்தும் ஆளும் கட்சி!

BJP party worker hacked to death Alappuzha district

Update: 2022-02-17 11:33 GMT

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாடில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி , இறந்தவர் ஹரிபாட் குமாரபுரம் அருகே உள்ள வரியம்கோட்டைச் சேர்ந்த சரத் சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, சரத் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.

நந்து பிரகாஷ் என்ற நபர் கும்பலை வழிநடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே ஆலப்புழா மாவட்டத்தில், மாஃபியா கும்பல் பிரச்சனைகளை உருவாக்குவதாக பல புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர் . அதே போதைப் பொருள் கும்பல்தான் பாஜக பிரமுகரைக் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று இரவு 12.30 மணியளவில் இக்கொலை சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையில் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சரத்தை தாக்கி கொன்றதாக பா.ஜ.க-வினர் குற்றச்சாட்டு  முனவைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு  முன்பாக ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பல் இரண்டு இளைஞர்களை கத்தியால் குத்தியது.

கேரளாவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கொலை

சமீப காலமாக கேரளா பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர்களுக்கு எதிரான வன்முறைகளின் மையமாக மாறியுள்ளது. கடந்த நவம்பரில், பாலக்காடு எல்லப்புள்ளியில் 26 வயதான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க பிரமுகர் சஞ்சித் அவரது மனைவி கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்டார் .

டிசம்பரில், மற்றொரு பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன்,   SDPI காரர்களால் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார் . கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

Tags:    

Similar News