குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி - கட்டியம் கூறும் கருத்துக்கணிப்புகள்

குஜராத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமைக்கும் என்று கருத்து கணிப்பில் தகவல்.

Update: 2022-10-04 05:12 GMT

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்களில் மீண்டும் பாரதிய ஜனதாவை ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் மாநிலங்களில் தற்போதைய சட்ட சபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவு நிறைவு பெறுகிறது. எனவே இந்த மாநிலங்களில் இந்த நாட்டில் இறுதியில் தேர்தல் நடைபெறுகின்றது. இதற்காக இரு மாநிலங்களிலும் ஆளும் பா.ஜ.க மற்றும் எதிர்கட்சிகளான காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிர பிரச்சாரங்களை முன்னெடுத்து உள்ளன. குஜராத்திலும் ஆம் ஆத்மி கட்சி தங்களது களத்தை தயார் படுத்தி வருகிறது.


அரசியல் நோக்கர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் ஏ.பி.பி நியூஸ் மற்றும் சிவோட்டர் இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. இதில் முக்கியமாக குஜராத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இமாச்சல் பிரதேசத்திலும் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிய வருகிறது.


பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் ஆன குஜராத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 182 இடங்களில் ஆளும் பாரதிய ஜனதா 135 முதல் 143 வரை இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. தற்போது 99 உறுப்பினர்களை அமைத்திருக்கும் அந்த கட்சி வருகின்ற தேர்தலில் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 இடங்கள் வரையிலும், ஆத்மிக்கு இரண்டு இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News