பெங்களூருவில் பரபரப்பு: 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்!

Update: 2022-04-08 10:04 GMT

பெங்களூருவில் தொடர்ந்து 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி போலீசாருக்கு கடிதம் ஒன்றும் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தகவல் கிடைத்ததும், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் சென்று பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொண்டோம். இதுவரையில் எந்த வெடிபொருளும் கிடைக்கவில்லை.

அநேகமாக இந்த மிரட்டல் புரளியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News