ஆப்கனில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டனர் !

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130 ஜே விமானம் காபூலில் இருந்து கிளம்பியது.

Update: 2021-08-21 07:41 GMT

ஆப்கனில் இருந்து மேலும் 85 இந்தியர்களை மீட்டுக்கொண்டு, இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130 ஜே விமானம் காபூலில் இருந்து கிளம்பியது. 

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கிருந்த இந்திய தூதர், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், காபூலில் சிக்கித் தவித்த மேலும் 85 இந்தியர்களுடன், விமானப்படைக்கு சொந்தமான சி-130 ஜே விமானம் காபூலில் இருந்து கிளம்பியது. வழியில், தஜகிஸ்தானின் துஷான்பேயில், எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின்னர், விமானம் கிளம்பியது. இந்த விமானம் பிற்பகல் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மேலும் 150 முதல் 180 இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17 விமானம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Dinamalar

Tags:    

Similar News