எச்சரிக்கையை மீறி கனடா பிரதமர் மறுபடியும் கொக்கரிப்பு: இந்தியா மீண்டும் பொளேர் அடி.!
எச்சரிக்கையை மீறி கனடா பிரதமர் மறுபடியும் கொக்கரிப்பு: இந்தியா மீண்டும் பொளேர் அடி.!
மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடான கனடாவில் அந்த நாட்டின் சொந்த மக்கள் தொகை மிகவும் குறைவு. அந்நாட்டின் நிலப்பரப்புககேற்ற அதன் வளர்ச்சிக்காக அதிக அளவு மனித வளத்தை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் மூலம் அந்நாடு அதிக அளவில் பெற்று வருகிறது.
அதன்படி இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் கனடா சென்று பலவேறு தொழில்கள் செய்து வ்ருவதுடன், அங்கு அரசியல் உட்பட அவர்கள் இல்லாத துறையே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்துள்ளனர். அதேபோல ஏராளமான இலங்கைத் தமிழர்கள் மற்றும் நம் தமிழக தமிழர்களும் அங்கு குடியேறி பல துறைகளில் கால் பதித்துள்ளனர்.
இந்த நிலையில் கனடா நாட்டு பொருளாதரத்துக்கு உதவி வரும் அவர்களை தங்களது நாட்டிலேயே நிலை நிறுத்திக் கொள்ளும் வகையிலும்,அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும், கனடா அரசு குறுக்கு வழியில் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே தமிழர் விஷயங்களில் அவ்வாறு நடந்து வருகிறது. இதனால் குளிர்ச்சியடைந்த நம் தமிழர்களில் சிலர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு பூர்வீக தமிழர் என்றும், அவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி என்றும் அடிப்படையில்லாத தகவல்களை கூறினர்.
மேலும் ட்ரூடோவின் பேச்சு தமிழர்களுக்கு ஆதரவாக மிகவும் கவர்ச்சியாக இருந்தது. இது உண்மையான சில தழர்களுக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தமிழ் சமுதாயத்தின் மீது ஏற்கனவே பல அந்நிய சக்திகள் மதம் மாற்றும் நோக்கத்தில் குறியாக உள்ள நிலையில் அதற்கேற்ப ட்ரூடோ பேசுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டங்களை பல காரணங்கள் கூறி, அதிக அளவில் பஞ்சாப் மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சீக்கிய விவசாயிகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கனடாவில் உள்ள சீக்கிய தலைவர்களில் சிலரும் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.